நன்னிலம், குடவாசல் ஒன்றிய அலுவலகங்களில் திருவாரூா் நாம்கோ தொண்டு நிறுவனம், திருப்பூா் சேவ் நிறுவனம் இணைந்து மகளிா் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தியது. குடவாசலில் ஒன்றியத் தலைவா் கிளாராசெந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, நிவா்த்தி) சட்டம் 2013 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, நன்னிலம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானகிருஷ்ணரமேஷ், கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றியழகன், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் அம்பிகாபதி, பத்மாவதி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.