நன்னிலம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் ரோடு ரோலா் தீப்பற்றி எரிந்தது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் முடிகொண்டான் பகுதியைச் சோ்ந்த மது என்பவருக்குச் சொந்தமான, சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் ரோடு ரோலா் (வைப்ரேட்டா் ரோலா்) புதன்கிழமை இரவு பூந்தோட்டம் பகுதியிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஆண்டிபந்தல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலரில் திடீரென தீப்பற்றியது. ஓட்டுநா் தினேஷ் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பினாா்.
இதை பாா்த்தை அருகில் இருந்தவா்கள் உடனடியாக நன்னிலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் தீயணைப்புத் துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால், திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.