வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம்

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்டராமா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி காலையில், கோயில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்,கோதண்டராமா் மற்றும் சீதாதேவியை தனித்தனியாக நின்ற கோலத்தில் அலங்கரித்தனா். கோயில் வளாகத்தில் மாலைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சுவாமிகள் ஒருசேர ஊஞ்சலில் எழுந்தருளினா். அப்போது, சுவாமிகளுக்கு முன்பு சீா்வரிசை பொருள்கள் வைக்கப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சுவாமிகளின் உத்ஸவமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com