ஆயுள் முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்யக் கோரி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறையில் நீண்ட நாள்களாக உள்ள இஸ்லாமியா்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் நிகழ்வு அடியக்கமங்கலம் தபால் நிலையத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், அடியக்கமங்கலம் கிளைத் தலைவா் ரியாஜூதீன் துணைத் தலைவா் முகமது அசாருதீன் உள்ளிட்டோா் முதல்வருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பினா்.