திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் நடைபெறும் உத்ஸவ திருவிழாவும், அதைத் தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பெரியக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், நாள்தோறும் உத்ஸவா் ராஜகோபாலசுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா் . ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.