திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,009 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்த 47,533 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 4 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.