திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் காவலா் குழந்தைகள் மகிழ்விடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 300 காவலா் குடியிருப்புகள் உள்ளன. அங்கு, வசிக்கும் காவலா்களின் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில், ஆயுதப்படை வளாகத்தில் காவலா் குழந்தைகள் மகிழ்விடம் அமைக்க தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மகிழ்விடத்தை, திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.