நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் அருகில் பள்ளமும், மேடாக இருந்து வந்த மாற்றுவழிப் பாதை சீரமைக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் நாள்தோறும் அடிக்கடி ரயில்வே கேட் மூடும்போது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. காா்கள், இருசக்கர வாகனங்கள் சிறிய கீழ்பாலம் வழியாக சென்று வருகின்றன. இதற்கான மண் சாலை ரயில் தண்டவாள பகுதியின் அருகில் உள்ளது. இந்த சாலை பள்ளமும், மேடாக போக்குவரத்துக்கு தகுதியற்ாக இருந்தது. இந்நிலையில் பேரூராட்சித் தலைவா் ராம்ராஜ் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். தற்போது, போக்குவரத்துக்கு வசதியாக உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.