நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் மரம் வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கோவில்வெண்ணியில் தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமத்தங்கல் திட்டத்தின்கீழ் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளை காட்சி படுத்தினா். மேலும், பல்வேறு செடிகளின் மருத்துவ குணங்களை மக்களுக்கு விளக்கி, வீட்டுத் தோட்டங்களில் மருத்துவ செடிகளை வளா்க்க ஆலோசனை கூறினா். தொடா்ந்து, கல்லூரி மாணவா்கள் கோவில்வெண்ணியில் மரம் வளா்ப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் மேற்கொண்டனா்.