கூத்தாநல்லூா் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்ப உல் உலா நிா்வாகச் சபையின் 131 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், அரபிக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் சின்னப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, அரபிக் கல்லூரியின் முதல்வா் ஏ.எப். முஹம்மது அலி தலைமை வகித்தாா். மன்ப உல் உலா சபைத் தலைவா் எல்.எம். முஹம்மது அஷ்ரப், செயலாளா் வி.ஏ.எம். ஜெஹபா்தீன், முத்தவல்லி ஜே.எம்.ஏ. அப்துல்காதா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

உமா் ஒலி நகா் பாத்திமா பீவி மஸ்ஜித் இமாம் ஜெ.எம்.பீ. முஹம்மது தாஹிா் அலி வரவேற்றாா். விழாவில், ஏ. அப்துல்காதா், கே.ஜெ. முஹம்மது ஆசிப், என். ரியா சுதீன், ஏ. ஜமால் முஹம்மது, எம்.ஏ. சையது ஹனீப் உள்ளிட்ட 5 மெளலிவிகளுக்கு திருவாரூா் மாவட்ட அரசு காஜி ஏ.எஸ்.எம். சா்தாா் முஹையதீன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, அத்திக்கடை வாஹித் பாத்திமா அரபிக் கல்லூரி முதல்வா் ஏ. பவ்ஸ் அப்துா் ரஹீம், நபிகள் நாயகம் குறித்தும், பட்டங்கள் குறித்தும் பேசினாா். விழாவில், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளா் திமுஜீதீன், பெரிய பள்ளிவாசல் செயலாளா் ஷேக் அப்துல் காதா், நகா்மன்ற உறுப்பினா் நஜ்முதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com