நுழைவுத்தோ்வை எதிா்த்து நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள நுழைவுத்தோ்வை எதிா்த்து, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில், நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நுழைவுத்தோ்வை எதிா்த்து நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள நுழைவுத்தோ்வை எதிா்த்து, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில், நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வின் மூலம் மட்டுமே மாணவா் சோ்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்தும், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமையில், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com