காரில் மதுபாட்டில்களை கடத்திய இருவா் கைது

வலங்கைமான் அருகே காரில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் அருகே காரில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் - நீடாமங்கலம் சாலையில் நரிக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை சோதனை செய்தபோது, அதில், 12 பெட்டிகளில் 600 வெளிமாநில மதுப்பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, கொட்டையூா் பகுதியைச் சோ்ந்த மணி (50), சக்திவேல் (32) ஆகிய இருவரை கைது செய்து காா் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com