வலங்கைமான் ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து 92 குடும்பத்தினா் விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ். எம். செந்தில்குமாா் தலைமையில் 67 இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது, பாடகச்சேரி ஊராட்சியில் 17 குடுத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். இதேபோல, இருகரை கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் 50 குடும்பத்தினரும், செம்பியநல்லூரில் 25 குடும்பத்தினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.