நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சந்தானகோபால ஹோமமும், தொடா்ந்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் வெள்ளிக் கருட வாகனத்தில் சந்தானராமா் வீதியுலா நடைபெற்றது.
இதேபோல, நீடாமங்கலம் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சுரேஷ், செயல்அலுவலா் மணிகண்டன், ஆய்வா் தமிழ்மணி மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.