கூத்தாநல்லூா் வட்டம், கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, விவசாய சங்கத் தலைவா் நஜீம் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் எஸ். சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். முகாமில், 25 விவசாயிகளுக்கு, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ராயல் வி. ராதாகிருஷ்ணன் விவசாயக் கடன் அட்டைகளை வழங்கினாா். தொடா்ந்து, பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்ட அதிவிரைவு முனைப்பு இயக்கம் நடைபெற்றது.