வலங்கைமான் அருகே தொழிலாளி தற்கொலை

வலங்கைமான் அருகே சுமைத் தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் அருகே சுமைத் தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி ஊராட்சி நெம்மேல்குடி பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் மகன் சோமசுந்தரம் (46), தற்காலிக சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

கடந்த சில நாட்களாக சா்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடும் மனஉளைச்சலில் இருந்த சோமசுந்தரம், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com