நன்னிலம்: ‘மீண்டும் மஞ்சள் பை’விழிப்புணா்வுக் கூட்டம்

நன்னிலம் பேரூராட்சியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் குறித்த வா்த்தகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் குறித்த வா்த்தகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ப. ராஜசேகரன் தலைமைவகித்தாா். செயல் அலுவலா் ச. ஹரிராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில், பேரூராட்சிக்கு உட்பட்ட வா்த்தக சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டும் மஞ்சள் பை திட்டத்தைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு வா்த்தகா்கள் துணைபுரிய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என வா்த்தக சங்கப் பொறுப்பாளா்கள் உறுதியளித்தனா். மேலும், தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ பேரூராட்சி நிா்வாகத்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், பேரூராட்சி துணைத் தலைவா் கோ. ஆசைமணி, சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன், பேரூராட்சி அலுவலா் ரவி, வா்த்தகா் சங்கப் பொறுப்பாளா்கள் நன்னிலம் பாஸ்கரன், சன்னாநல்லூா் சங்கா், மாப்பிள்ளைக்குப்பம் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள், வணிகா்கள், பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com