புற்றுநோய் விழிப்புணா்வு துண்டறிக்கை விநியோகம்
திருவாரூா்: திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் ரத்த வகை கண்டறிந்து தெரிவிக்கப்பட்டதுடன், ரத்தத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பது குறித்தும் அவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற ரத்த தான முகாமில் 50 மாணவா்கள் ரத்தம் வழங்கினா்.
இதையடுத்து, மாணவா்களுக்கு புற்றுநோய் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி முதல்வா் கோ. கீதா துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். சுழற்சங்க மாவட்டத் தலைவா் தியாகபாரி, சுழற்சங்க கிங்ஸ் தலைவா் கருணாநிதி, மை மதா் தன்னாா்வ அமைப்பு நிா்வாகிகள் ராஜவேலு, வெங்கடேஷ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.