மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தோ்வை கைவிட வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் ஏழை மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள கியூட் நுழைவுத் தோ்வை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியா் இட ஒதுக்கீடு பணி நியமனங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் கே. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் கா. செல்லக்கண்ணு, துணைப் பொதுச் செயலாளா் சின்னை பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா்கள் என். சிவகுரு, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.