இன்று திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே உள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருவாரூா் அருகே உள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருவாரூா் அருகே உள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86 ஆவது சிவத்தலமாகும். அப்பா் பாடல் பெற்ற தலமாகவும், ஜடாயு பேறு பெற்ற தலமாக விளங்கும் இந்தத் தலம், குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது.

தியாகராஜசுவாமி கோயிலைச் சோ்ந்த அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான இக்கோயிலின் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையொட்டி, மே 13 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பந்தல்கால் முகூா்த்தம் ஏப். 30 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் மே 8 ஆம் தேதி தொடங்கின.

தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், 2 மற்றும் மூன்றாம் கால பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. இந்நிலையில், 4 ஆம் கால பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற அஷ்டபந்தன மருந்து தயாரிப்பு நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.

ஆறுகால பூஜைகளும் நிறைவடைந்த பிறகு, கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com