இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை கற்கோயில் கிராமத்தில் மாவட்ட குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், கட்சியின் மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ. கே. உலகநாதன், மாவட்ட துணை செயலாளா் ஞானமோகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில், நீடாமங்கலம் ஒன்றிய மாநாடு ஜூன் 12-ஆம் தேதி பொதக்குடியில் நடத்துவது, வரும் மே 18-முதல் 24-ஆம் தேதி வரை அனைத்து கிளைகளிலும் கூட்டம் நடத்துவது, மே 15-ஆம் தேதி கிளை செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டம் சேகரையில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.