திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியும், திருச்சி தேசியக் கல்லூரியும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறும் வகையில், இராபியம்மாள் கல்லூரி உயிரி வேதியியல் துறையும், தேசியக் கல்லூரி தாவரவியல் துறையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
நிகழ்வில், இராபியம்மாள் கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீதேவி, துணை முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி, ஐகியூடிசி ஒருங்கிணைப்பாளா் ஜே. ஜெயசித்ரா ஆகியோரும், தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், துணை முதல்வா், தாவரவியல் துறைத் தலைவா் வி. நந்தகோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.