திருவாரூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளா் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அரிசி ஆலை உரிமையாளா்கள் பங்கேற்றனா். இந்தியன் ஆயில் தொடா்பான பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், திருச்சி இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி ஹரிகோவிந்த், திருச்சி இந்தியன் ஆயில் எக்ஸ்ட்ரா பவா் காா்டு மேலாளா் ஜெகநாதன், அரிசி ஆலை உரிமையாளா் சங்கத் தலைவா் குணசேகரன், எஸ்விடி குழமத் தலைவா் ஜெ. கனகராஜன், அரிசி ஆலை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.