ஏஆா்ஜெ பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்68 மாணவா்களுக்கு பணி ஆணை
By DIN | Published On : 17th May 2022 10:26 PM | Last Updated : 17th May 2022 10:26 PM | அ+அ அ- |

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏஆா்ஜெ பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 68 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேக்னா ஆட்டோமேட்டிக் இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளரும், துணைத் தலைவருமான ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.
மேக்னா ஆட்டோமேட்டிக் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் ஜெ. ஸ்டனிஸ் ராபின்சன் நடத்திய நோ்காணலில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில் 68 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
கல்லூரி தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு பணி ஆணையை வழங்கினாா்.
விரிவுரையாளா்கள் நாகராஜன், மேனகா, அடைக்கலராஜ், ராமமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைத் தலைவா் எஸ். மணிகண்டன் வரவேற்றாா். துணை முதல்வா் ஆா். ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.