வலங்கைமானில் பழுதடைந்த இந்தியா மாா்க் குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வாா்டில் குடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. இதன் அருகே பேரூராட்சி பராமரிப்பில் உள்ள குடிநீா் குழாய் பல நாட்களாக உடைந்து கிடக்கிறது.
இதனை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.