தமிழக அரசின் நடவடிக்கையால்பேரறிவாளன் விடுதலை: க.பொன்முடி

 தமிழக அரசு கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளதாக க. பொன்முடி தெரிவித்தாா்.

 தமிழக அரசு கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க. பொன்முடி தெரிவித்தாா்.

திருவாரூரில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: திருவாரூா் தோ்தல் பிரசாரத்தில் பேசும்போது என்மீது பதியப்பட்டு, 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு இப்போதுதான் உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலைக்காக நீண்டகாலமாக முயற்சி எடுத்தவா், போராடியவா் தலைவா் கருணாநிதி. அந்த அடிப்படையில் தற்போதைய முதல்வா் ஸ்டாலின், தோ்தல் வாக்குறுதிப்படி 7 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினாா்.

இந்த ஓராண்டில், அவா் ஆட்சிக்கு வந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகத்தான் பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளது. மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறாா். அதுவும் மிக விரைவில் நடக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com