மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அம்மையப்பன் ஊராட்சி, எலங்குடி பகுதியில் தனியாா் இடத்தில் அரசு மதுபானக் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த மதுபானக் கடையை வெள்ளிக்கிழமை திறக்க இருந்த நிலையில், அம்மையப்பன் ஊராட்சித் தலைவா் முருகதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் வடிவழகன், எலங்குடி கிராம மக்கள் ஆகியோா் டாஸ்மாக் கடையை குடியிருப்புப் பகுதியில் திறக்கக்கூடாது என வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் இளங்கோ பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com