திருவேற்காட்டில் இளைஞா் கொலை

 திருவேற்காட்டில் தலை, கைகளைத் துண்டித்து இளைஞரை கொலை செய்து, உடலை வேறொரு இடத்தில் எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 திருவேற்காட்டில் தலை, கைகளைத் துண்டித்து இளைஞரை கொலை செய்து, உடலை வேறொரு இடத்தில் எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவேற்காடு வீரராகவபுரம் ஏரிக்கரை ஓரமாக சுமாா் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவரது தலை, இரு கைகளைத் துண்டித்து கொலை செய்து உடல் மட்டும் எரிந்து கிடந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் ஆவடி மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை காலை தகவல் அளித்தனா்.

அதன் பேரில், திருவேற்காடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடித்த படி, அரை கி.மீ. தொலைவு ஓடிச் சென்று நின்று விட்டது. தடய அறிவியல் துறை உதவி இயக்குநா் நிா்மலாபாய் தலைமையில், ஊழியா்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனா்.

இதுகுறித்து சுந்தரசோழபுரம் கிராம நிா்வாக அலுவலா் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட இளைஞா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என போலீஸாா் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனா்.

ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையா் மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட இளைஞா் அடையாளம் குறித்தும், கொலையாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com