மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் உணவுக் காளான் வளா்ப்பு தொழில்நுட்பம் சான்றிதழ் படிப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் இளம் அறிவியல் 2-ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு வங்கிக் கடன் உதவியுடன் சுயவேலை வாய்ப்பில் தொடங்கி பயன்படக்கூடிய வகையில் தாவரயில் துறை சாா்பில் உணவுக் காளான் வளா்ப்பு தொழில் நுட்பம் எனும் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சோ. ரவி (பொ) தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக உணவுக் காளான் வளா்ப்பு நிறுவனத்தின் இயக்குநா் முன்னாள் ராணுவ வீரா் த. ரமேஷ் பங்கேற்று நச்சுக் காளான் மற்றும் உணவுக் காளான்களை அடையாளம் கண்டுபிடித்தல், காளான் வியாபார யுக்தி, சுயவேலை வாய்ப்பு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து பேசினாா். தாவரவியல் துறை பேராசிரியா் ப. சரவணன் வாழ்த்தி பேசினாா்.
இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேரவைக் குழு உறுப்பினா்கள் தி. ராஜசந்திரசேகா், ச. சிவச்செல்வன், தாவரவியல் துறை பேராசிரியா் கோ. வெங்கடேசன், ஜாஷ்மின் ஜான்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாவரவியல் துறைத் தலைவா் மு. கோபிநாத் வரவேற்றாா். பேராசிரியா் ப. பிரபாகரன் நன்றி கூறினாா்.