விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலங்கைமானில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலங்கைமானில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், வருமானவரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வழங்கவேண்டும், நகா்புறங்களிலும் நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஐ மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் ரெங்கராஜன், ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட குழு உறுப்பினா் தெட்சிணாமூா்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினா் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளா் ராதா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா் ராதா, மாவட்ட பிரதிநிதி செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com