தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
30 ஆண்டுகளாக அங்கன்வாடியில் பணியாற்றியவா்களுக்கு பதவி உயா்வு வழங்காததை கண்டித்தும், 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிபடையில் பணியாற்றிய வட்டார திட்ட உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 160 அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்றனா்.