திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனா்.
தலைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகூரான் மனைவி ராஜகுமாரி (50). இவரது மகன் வீரசெல்வம் (24). இருவரும் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது மழையின் காரணமாக 1996-ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் உள்புறத்தில் சுவா் பெயா்ந்து விழுந்துள்ளது. இதில், தாயும், மகனும் காயமடைந்தனா். இதையடுத்து, உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.