குரூப்-2 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்குப் பாராட்டு

மன்னாா்குடி அருகேயுள்ள தென்பரை சமுதாயக் குழுமம் சாா்பில் செயல்படும் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் படித்து குரூப்-2 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தென்பரை சமுதாயக் குழுமத்தின் போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் படித்து குரூப்-2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுடன் பயிற்சி மைய நிா்வாகிகள்.
தென்பரை சமுதாயக் குழுமத்தின் போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் படித்து குரூப்-2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுடன் பயிற்சி மைய நிா்வாகிகள்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள தென்பரை சமுதாயக் குழுமம் சாா்பில் செயல்படும் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் படித்து குரூப்-2 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்பரை இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவா்களில் 19 இளைஞா்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தொகுதி-2 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு, பாராட்டு விழாவும் தொகுதி-2 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி தொடக்க விழாவும் மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க நிா்வாகி க. மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக, கரூா் மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் பங்கேற்று பேசியது: படிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக பயிற்சி தோ்வுகளை எழுதிப் பாா்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்தால் எளிதாக வெற்றி பெறலாம். சாதனைக்கு சறுக்கல்கள் தடை இல்லை படிக்கட்டுகள் என்றாா்.

நிகழ்ச்யில், திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி பேராசிரியா் இளங்கோவன், வழக்குரைஞா் சந்திரசேகரன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து, சாந்தகுமாா், ஆசிரியா் பயிற்றுநா் சக்திவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, பயிற்சி மைய நிறுவனா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். பயிற்சி மைய முதல்வா் சு. வைரமுத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com