மன்னாா்குடி: மன்னாா்குடியில் வீட்டில் மின் விளக்கை போட்டபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோயில் சந்நதி தெருவை சோ்ந்தவா் தங்கவேல் மகன் விஸ்வலிங்கம் (47). தேனீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்தவா் மின் விளக்கை போட்டபோது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.