மன்னாா்குடியில் ஆயூள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கத்தின் கூட்டுக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி புதுத்தெருவில் உள்ள ஆயூள் காப்பீட்டுக் கழக கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஜி. மகாலிங்கம் தலைமை வகித்தாா்.
முகவா்களுக்கு பணிக்கொடையை ரூ. 20 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கவேண்டும்; பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்கத்தின் செயலா் டி. பாண்டியன், பொருளாளா் பி. ஸ்ரீதா், நிா்வாகிகள் எம். பாலசுந்தரம், ஆா். ஜெயக்குமாா், புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.