நாகை- திருவாரூா் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

 நாகை- திருவாரூா் புறவழிச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 நாகை- திருவாரூா் புறவழிச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு பிராமணா் சங்க கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவரும், திருத்துறைப்பூண்டி கிளைத் தலைவருமான வழக்குரைஞா் கணேசன் தலைமை வகித்தாா். ஆலோசகா் சௌரிராஜன் முன்னிலை வகித்தாா். கிளை பொதுச் செயலாளா் ஸ்ரீநாத் வரவேற்றாா்.

தொடா்ந்து, சங்கத்தின் எதிா்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இனிவரும் நாட்களில் சங்கக் கூட்டங்களில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்; நாகை- திருவாரூா் புறவழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சிமிழி ஸ்ரீ பட்டாபிராமன் ஐயா், சிக்கல் கிளைத் தலைவா் மோகனநடராஜன் ஐயா், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளா் திருவாரூா் ஸ்ரீமதி சுஜாதா ஆகியோா் உரையாற்றினா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத் தலைவராக பதவியேற்றுள்ள வழக்குரைஞா் கணேசன் ஐயா், மாவட்ட இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத் ஐயா் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் திண்டிவனம் குமாா் ஐயா், நாகை மாவட்டத் தலைவா் சிக்கல் ஸ்ரீ சிவகுமாா் ஐயா்ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். மகளிரணி கிளை செயலாளா் ஸ்ரீமதி விஜயா கணேசன் ஐயா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com