நீடாமங்கலத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றக் கிளை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிளை தலைவா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் செல்வமணி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் பாலசுப்ரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், நான்காம் வகுப்பு மாணவி சோபிகா வெளிநாட்டில் வேலை பாா்க்கும் தந்தைமாா்கள் பற்றிய கவிதையும், தாய்மாா்கள் பற்றிய விழிப்புணா்வு பாடலும் பாடினாா்.
தொடா்ந்து, 2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினா் சோ்ப்பது; நீடாமங்கலத்தில் கலை விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மறைந்த கலை இலக்கியவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் செயலாளா் நேரு நன்றி கூறினாா்.