நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வளா்ச்சித் திட்டம் குறித்து இணையவழி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைத் தலைவா் ஞானசேகரன், கூடுதல் ஆணையா் அன்பழகன், வட்டார கல்வி அலுவலா் ந. சம்பத் மற்றும் வருவாய்த் துறையினா், வேளாண்மைத் துறையினா், தோட்டக்கலைத் துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றிய அலுவலா்கள் பங்கேற்றனா்.
2023-24 ஆம் ஆண்டுக்கு நிலையான வளா்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம் தயாா் செய்தல் குறித்து பயிற்சியில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.