விவசாயத் தொழிலாளா் சங்கக் கூட்டம்

மன்னாா்குடியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்க உறுப்பினா் கே. சிவானந்தம் தலைமை வகித்தாா். மன்னாா்குடி அருகே சித்தேரியில் பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெறும் வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ் தொடக்கவுரையாற்றினாா். விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் என். மகேந்திரன் விளக்கிப் பேசினாா்.

இக்கூட்டத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, கட்சி நிா்வாகிகள் எஸ். பாப்பையன் எஸ். மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com