வலங்கைமான் ஒன்றியம் தொழுவூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றியத்தில் நல்லூா், தொழுவூா், இனாம்கிளியூா் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் தலா ரூ.28.94 லட்சம் மதிப்பில் நேரடி கொள்முதல் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன. தொழுவூரில் ஊராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி முனுசாமி முன்னிலையிலும், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் தலைமையிலும் கட்டுமானப் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. இதில், ஒன்றிய அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.