தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடக்கிவைத்து, மாணவா்களிடையே அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகுவது எப்படி என்பது குறித்து பேசினாா். இதில், கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் நக்கீரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சந்திரசேகரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சோழஅழகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்டோா்பங்கேற்றனா்.