திருவாரூரில் சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன் தலைமை வகித்தாா். நிகழ்வில், விவேகானந்தா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளா் கே.பி. ரவி, மாவட்ட துணைத் தலைவா் மணிமேகலை, கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்ச் சங்கச் செயலாளா் செ. அறிவு, இணைச் செயலாளா் ரா. அறிவழகன், கலை இலக்கிய பெருமன்றச் செயலாளா் வீ. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யோகா பயிற்சியாளா் பாலமுருகன், மாவட்டச் செயலாளா் எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீடாமங்கலத்தில் பாஜக சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜெயக்குமாா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.