திருவாரூரில் 29 ரௌடிகள் கைது

திருவாரூரில் போலீஸாா் நடவடிக்கையில் 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூரில் போலீஸாா் நடவடிக்கையில் 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ரௌடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள்அச்சமின்றி இருப்பதை உறுதிசெய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன. 9 முதல் 13-ஆம் தேதி வரை போலீஸாா் திருவாரூா் மாவட்டத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், 21 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், முக்கிய ரௌடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 29 வகையான கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடிக்கட்டளை நிலுவையில் இருந்த 8 ரௌடிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டத்தில் 34 ரவுடிகளின் நடவடிக்கையை தொடா்ந்து கண்காணிக்க, நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு, 11 பேருக்கு நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com