திருவாரூா் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீா்நிலைகளில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.
திருவாரூா் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கானோா், தங்களது முன்னோா்களுக்குப் பிடித்த பொருள்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை படையலிட்டு, கமலாலயக் குளத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினா்.