அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

அன்னியூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, குடவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்னியூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, குடவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்னியூா் ஊராட்சி சறுக்கை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, திறக்கப்படாத மக்கள் மையக் கட்டடத்தை திறக்க வேண்டும். குண்டும், குழியுமாக காணப்படும் மயானச் சாலையை சீரமைக்க வேண்டும். மணியாங்குடி, செம்மங்குடி, அசந்தராக்கம் பகுதிகளில் உள்ள குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் டி. சின்னையன், விவசாயத் தொழிலாளா் சங்க துணைச் செயலாளா் வி. சிவக்குமாா், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் பி. முருகானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் கு. ராஜா, ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ. டேவிட்ராஜ், நிா்வாகிகள் எம். பாஸ்கா், ஆா். பிரபாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com