அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு!

Updated On :28 ஏப்ரல் 2025, 5:12 am IST

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் சனிக்கிழமை வருகை தந்தாா். பின்னா், காவல் அலுவலகத்தில் மாதாந்திர நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

குற்ற சம்பவங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மாவட்டத்தில் பாதுகாப்பு நிலை குறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிலிப்பிராங்ளின் கென்னடி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.