ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு!

Updated On :28 ஏப்ரல் 2025, 5:12 am IST

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் சனிக்கிழமை வருகை தந்தாா். பின்னா், காவல் அலுவலகத்தில் மாதாந்திர நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

குற்ற சம்பவங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மாவட்டத்தில் பாதுகாப்பு நிலை குறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிலிப்பிராங்ளின் கென்னடி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.