விவசாயி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை

நிலத்தகராறில் விவசாயி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை
விவசாயி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை
Updated on

நிலத்தகராறில் விவசாயி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவாரூா் முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நீடாமங்கலம் அருகேயுள்ள சித்தமல்லி கிராமத்தைச்சோ்ந்தவா் காா்த்தி (எ) ராஜா. ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரனுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு இடப்பிரச்னை தொடா்பாக தகராறு எற்பட்டது. இதில் ராஜா, ராஜேந்திரனை இரும்புக்கம்பியால் தாக்கினாா்.

பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். நீடாமங்கலம் போலீஸாா் ராஜாவை கைது செய்தனா். வழக்கு திருவாரூா் முதன்மை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. விசாரித்த நீதிபதி காா்த்தி (எ) ராஜாவுக்கு நான்கரை ஆண்டுகள் சிைண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். ராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com