திருவாரூர்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 3 சிறுவா்கள் கைது
திருவாரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே கருக்கங்குடி பகுதியில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சோ்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 16 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவா்கள், 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அத்துடன் அதை விடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தாயாா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களையும் கைது செய்து, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.
