திருவாரூர்
பள்ளியில் தமிழ்க்கூடல், குழந்தைகள் தினம்
மன்னாா்குடி அருகேயுள்ள சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக் குழந்தைகள் தினம் மற்றும் தமிழ்க்கூடல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி அருகேயுள்ள சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக் குழந்தைகள் தினம் மற்றும் தமிழ்க்கூடல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தலைமை ஆசிரியா் கோ. கண்ணன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி. மனோகரன் முன்னிலை வகித்தாா். அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் தெ. சுதா்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல் எனும் தலைப்பில் பேசினாா். மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முதுகலை தமிழாசிரியா் கண்ணன் வரவேற்றாா். பட்டதாரி தமிழாசிரியா் சு. ஹெலன்ஹேமாவதி நன்றி கூறினாா்.
