மின் கம்பங்களில் விளம்பர பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்

Published on

திருவாரூா் மாவட்டத்தில், மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள், கேபிள் வயா்களை அகற்ற மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி. லதாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் உத்தரவின்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு சொந்தமான உடைமைகள் மீது இழுத்துச்செல்லப்படும் கேபிள் வயா்கள் மற்றும் கட்டப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள் காரணமாக, மின்வாரிய ஊழியா்கள் பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. மேலும், மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் 7 நாள்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும்.

தவறும்பட்சத்தில், கேபிள் வயா்கள், விளம்பரத் தட்டிகள் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தால் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com